கிராம பெண்கள் முன்னணி 

இல் பெண்களின் உள்ளடக்கம் மற்றும் பங்கேற்பை அதிகரிக்கும் பெண்களின் ஈடுபாடுகளில் அர்த்தமுள்ள செயல்முறைகளை மேம்படுத்துதல.

திட்டத்தின் ஒட்டுமொத்த இலக்கு

பெண்கள், வயதான பெண்கள், மாற்றுத்திறனாளிப் பெண்கள் மற்றும் மாற்றுப்பாலினப் பெண்கள் ஆகியோரின் குரல்களை மேலோங்கச்செய்து, அவர்களின் தலைமை, பிரதிநிதித்துவம் மற்றும் சமூக ஒருமைப்பாடு ஆகிய செயல்வழிகளில் தீவிர பங்கேற்பை ஊக்குவிப்பதன் மூலம் பெண்களுக்கு எதிரான அனைத்துவகை வன்முறைகளையும் தடுக்கும் அதேவேளையில் அவர்களுக்கு சமத்துவம், மரியாதை மற்றும் பாதுகாப்பை நிலைநிறுத்தும் ஒரு சமூகத்தை உருவாக்குதல்.

பெண்கள் சட்ட மற்றும் கொள்கைச் சீர்திருத்தங்கள் மூலமாகப் பால்நிலை அடிப்படையிலான வன்முறை மற்றும் பாகுபாடுகளுக்கு எதிரான மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பைக் கொண்டிருப்பார்கள்

கள மட்டத்தில் உள்ள பெண்கள் பால்நிலை உணர்திறன் கொண்ட அரச ஆதரவு வளங்கள் மற்றும் சேவைகளுக்கான அணுகலை மேம்படுத்தியுள்ளனர்

மோதலால் பாதிக்கப்பட்டு இடப்பெயர்விற்கு ஆளான பெண்களுக்கு பால்நிலை உணர்திறனுள்ள, அரசால் வழங்கப்படுகின்ற உளநல-சமூக சேவைகள் மற்றும் நிலையான தீர்வுகள் கிடைத்தல்

பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க குறிப்பாக வயதான பெண்கள் சிறுமிகள் இயலாமைகளை உடைய பெண்கள் மற்றும் மாற்றுப் பாலினப் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கவும் அவர்களின் சமூக-பொருளாதார வாய்ப்புகளையும் தீர்மானமெடுப்பதில் பங்கேற்பதை மேம்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன

பெண்கள் பால்நிலை உணர்திறன் மற்றும் ஒழுங்குபடுத்தப்பட்ட அனர்த்த முகாமைத்துவப் பொறிமுறைகளுக்கு மேம்படுத்தப்பட்ட அணுகலைக் கொண்டிருப்பார்கள்

இராணுவக் கணவனை இழந்த பெண்கள் முன்னாள் பெண் போராளிகள் மற்றும் பெண்கள் தலைமைத் தாங்கும் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துகின்ற பால்நிலை உணர்திறன் கொண்ட அரச சேவைகளுக்கான அணுகல் அதிகரித்துள்ளது

இலங்கையில் கள மட்டத்திலுள்ள பெண்களைப் பாதிக்கும் நுண்நிதி நடைமுறைகள் தொடர்பான தலையீடுகள் பால்நிலையைக் கருதுவதாகவும் பிரதானப்படுத்துவதாகவும் பின்பற்றப்படுகின்றன

சமாதானத்தைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் மோதல்-தடுப்பு மற்றும் மோதல் தீர்வு ஆகியவற்றில் பெண்களின் சமமான ஈடுபாடு மற்றும் ஆளுகை மற்றும் அரசியலின் தீர்மானமெடுக்கும் மட்டங்களில் பெண்களின் ஈடுபாட்டின்மூலம் இலங்கைச் சமூகத்தின் ஜனநாயக விழுமியங்களை மேம்படுத்துதல்

இலங்கையில் பன்முகத்தன்மை மற்றும் அரச சேவையில் அனைவரையும் உள்வாங்குதல், அரச சேவை வழங்கலில் புத்தாக்கம் மற்றும் அனைவரையும் உள்வாங்குதல் ஆகிய செயன்முறைகள் தொடர்பாக காலத்திற்கேற்ற, மிகவும் துல்லியமான தரவுகள் மற்றும் தகவல்களால் அறிவு செழுமைப்படுத்தப்பட்டிருத்தல்.

பிரதேச கவனக்குவிப்பு

காலி மாவட்டங்கள்

எதிர்பார்க்கப்படும் பெறுபேறுகள்

புதிய ஆய்வானது பகிரங்க சேவை வழங்கலில் மக்களின் அனுபவம் தொடர்பான புதிய விடயங்களை வெளிக்கொண்டு வருகிறது.

சமாதானத்துக்கான பயணப்பாதைகள் ஆனது, அனைவரையும் உள்வாங்குகின்ற, சமத்துவமான மற்றும் பொறுப்புவாய்ந்த பகிரங்க சேவை வழங்கல் தொடர்பான சனசமூக கண்ணோட்டங்களைப் பதிவு செய்த ஆய்வறிக்கையை சமீபத்தில் நடைபெற்ற இணையவழி கருத்தரங்கில் வெளியிட்டது.

மேலும் வாசிக்க

உள்வாங்குகை மற்றும் பாதுகாப்பான நியாயப்பிரசாரத்தினை மேம்படுத்தல்

சமாதானத்துக்கான பயணப்பாதைகள் நிறுவனம் தனது IFF பங்காளர்களுக்காக புடீயூ மற்றும் பாதுகாப்பான நியாயப்பிரசாரம் (ளுயகந யுனஎழஉயஉல) குறித்த ஒரு பயிலமர்வினை நடத்தியது. ஜனவரி 27 மற்றும் 28 ஆகிய திகதிகளில் நடைபெற்ற இம் மும்மொழிப் பயிலமர்வு, பால்நிலைஅடிப்படையிலான பகுப்பாய்வு (புடீயூ), பாதுகாப்பான நியாயப்பிரசாரம், மொழி உரிமைகள் மற்றும் மனித உரிமை அடிப்படையிலான அணுகுமுறை (ர்சுடீயு) ஆகிய தலைப்புகளில் திட்டமிடப்பட்டுள்ள பயிலமர்வுகளின் தொடரில் முதலாவதாக அமைந்தது.

மேலும் வாசிக்க

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை தீர்மானம் 1325 (UNSCR 1325) இன் 25 ஆம் ஆண்டு நிறைவை சமாதானத்துக்கான பயணப்பாதைகள் கொண்டாடுகின்றது

“UNSCR 1325@25 – பெண்கள், சமாதானம் மற்றும் பாதுகாப்பின் 25 வருடங்களைக் கொண்டாடுதல்’’ என்ற நிகழ்வானது ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை தீர்மானம் 1325 இன் 25 ஆம் ஆண்டு நிறைவை நினைவுகூறும் முகமாக சமாதானத்துக்கான பயணப்பாதைகளினால் ஒழுங்கு செய்யப்பட்டது. சமாதானம் மற்றும் பாதுகாப்பைக் கட்டியெழுப்புதலில் பெண்களின் முழுமையான மற்றும் சமமான பங்குபற்றுகையினை அங்கீகரிக்கின்ற மற்றும் ஊக்குவிக்கின்ற முதலாவது சர்வதேசக் கட்டமைப்பாக ருளுஊசு 1325 அமைந்துள்ளது.

மேலும் வாசிக்க