எண்ணக்கரு குறிப்புகளைக் கோருதல்
சமாதானத்துக்கான பயணப்பாதைகள் செயற்திட்டமானது, இலங்கையின் பெண்கள், சமாதானம் மற்றும் பாதுகாப்பு தேசிய செயற்திட்டத்தினை அமுல்படுத்துவதற்கு ஆதரவளிக்கக் கூடிய எண்ணக்கருக் குறிப்புகளைச் சமர்ப்பிப்பதற்கு பெண்கள் உரிமைகள்சார் அமைப்புகளுக்கு (WROs) அழைப்பு விடுக்கிறது. எண்ணக்கருக் குறிப்புகள் தெரிவின் பின்னர், தெரிவு செய்யப்பட்ட அமைப்புகள் பெண்கள், சமாதானம் மற்றும் பாதுகாப்பு நிதியின் இலக்குகளையும் கீழே விபரிக்கப்பட்டுள்ள தகுதிகளைப் பூர்த்தி செய்யும்பட்சத்தில், முழுமையான முன்மொழிவொன்றைச் சமர்ப்பிப்பதற்கு அழைப்பு விடுக்கப்படும்.
தகுதிகாண் தேவைகளைப் பூர்த்தி செய்யாத ஆனால் மேலதிக தேடலுக்குத் தகுதியாகும் செயற்திட்டக் குறிப்புகளைக் கொண்ட பெண்கள் உரிமைகள்சார் அமைப்புகள் தமது ஆற்றலைக் கட்டியெழுப்புவதற்காக வடிவமைக்கப்பட்ட நிகழ்ச்சித் திட்டமொன்றில் சேர்ந்து கொள்வதற்கான வாய்ப்பைப் பெறும். இந்நிகழ்ச்சித் திட்டத்தைப் பூர்த்தி செய்ததன் பின்னர், பெண்கள் சமாதானம் மற்றும் பாதுகாப்பு நிதிக்கு மீள விண்ணப்பிப்பதற்கு இவ்வமைப்புகள் தகுதி பெறும்.
உள்வாங்கும் சேவைகள் : மக்கள் அனைவரும் தமக்கு அங்கீகாரம் கிடைப்பதாகவும், அவர்கள் அச்சமூகங்களின் ஒரு பகுதி என்றும் உணரும் ஒரு சூழலை உருவாக்குதல். அது உறவு, அனுபவம் சார்ந்தது.
1. சமாதானத்துக்கான பயணப்பாதைகள் பற்றிய அறிமுகம்.
சமாதானத்துக்கான பயணப்பாதைகள்: உள்வாங்கும் ஆட்சி மற்றும் சமூக ஒத்திசைவைக் கட்டியெழுப்பல் என்பது இலங்கையில் சமயம், இனம் மற்றும் மொழிக் குழுக்ககளிலும் அவற்றுக்கு மத்தியிலும் - குறிப்பாக, பெண்கள் மற்றும் பெண்பிள்ளைகளுக்கிடையிலும் மத்தியிலும் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் பலப்படுத்துவதனை இலக்காகக் கொண்ட ஐந்தாண்டுத் (2024 – 2029) திட்டமொன்றாகும்.
ஐக்கிய நாடுகளின் பெண்கள் சமாதான மற்றும் பாதுகாப்பு நிகழ்ச்சி நிரலிற்கு இணங்கிச் செல்கின்ற வகையில், மோதல், பலவீனம் மற்றும் பாதுகாப்பின்மை என்பவற்றுக்குப் பதிலிறுப்பதற்கு பெண்கள் மற்றும் பெண்கள் உரிமைகள்சார் அமைப்புகள் என்பவற்றின் தலைமைத்துவத்தையும் பங்குபற்றுதலையும் முன்னேற்றுவதே பெண்கள் சமாதானம் மற்றும் பாதுகாப்பு நிதியின் நோக்கமாகும்.
பெண்கள் உரிமைகள்சார் அமைப்புகள் மற்றும் சிவில் சமூகத்தினருக்கு ஆதரவளிப்பதற்கு மேலதிகமாக, பின்வருவனவற்றுக்காக பொது நிருவாகம் மற்றும் மகளிர் விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சுக்கள், தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகம் மற்றும் ஐந்து மாகாணங்களின் ஏழு மாவட்டங்களில் அமைந்துள்ள பிராந்திய நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்ற இச்செயற்திட்டம் திட்டமிடுகிறது:
01. அனைவரையும் உள்வாங்குதல், சமத்துவமான மற்றும் பொறுப்புக்கூறக்கூடிய பொது சேவைகள்
02. மொழி உரிமைகள், பால்நிலைசார் பதிலிறுப்பு சேவைகள் மற்றும் சமூகக் கூட்டிணைவு ஆகிய பரப்புகளில் இலங்கையின் பெண்கள், சமாதானம் மற்றும் பாதுகாப்பு (WPS) தேசிய செயல் திட்டத்தை (NAP) அமுல்படுத்தல்.
உள்வாங்கும் சேவைகள்
மக்கள் அனைவரும் தமக்கு அங்கீகாரம் கிடைப்பதாகவும், அவர்கள் அச்சமூகங்களின் ஒரு பகுதி என்றும் உணரும் ஒரு சூழலை உருவாக்குதல். அது உறவு, அனுபவம் சார்ந்தது.
சமத்துவமிக்க சேவைகள்
பொறுப்புக்கூறக்கூடிய சேவைகள்: அரசாங்கம் அதன் நடவடிக்கைகளுக்கு பொறுப்புக்கூறுவது அதன் கடப்பாடு போன்று அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டுமென எதிர்பார்ப்பது மக்களின் உரிமையாகும். உதாரணமாக, தகவலறியும் உரிமை> முறைப்பாட்டுப் பொறிமுறைகள் மற்றும் குடிமக்கள் சாசனம் என்பனவற்றைக் குறிப்பிடலாம்.
பொறுப்புக்கூறலுடன் கூடிய சேவைகள்
அரசாங்கம் அதன் நடவடிக்கைகளுக்கு பொறுப்புக்கூறுவது அதன் கடப்பாடு போன்று அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டுமென எதிர்பார்ப்பது மக்களின் உரிமையாகும். உதாரணமாக, தகவலறியும் உரிமை> முறைப்பாட்டுப் பொறிமுறைகள் மற்றும் குடிமக்கள் சாசனம் என்பனவற்றைக் குறிப்பிடலாம்.
பெண்கள் சமாதானம் மற்றும் பாதுகாப்பு நிதி (WPSF) தொடர்பாக எண்ணக்கரு குறிப்புக்களுக்கான அழைப்பு இவ்வருடம் நவம்பர் மாதத்தில் தொடங்கி வைக்கப்படும். இது பிரத்தியேகமாக, பெண்கள் உரிமைகள் சார்ந்த அமைப்புக்களுக்கானது (WROs).
பெண்கள் உரிமைகள் அமைப்புக்கள் (WROs): பெண்களின் உரிமைகள், பால்நிலை சமத்துவம், பெண்கள் மற்றும் அல்லது பெண்பிள்ளைகளுக்கு எதிரான வன்முறைகளை அல்லது பாலியல் மற்றும் பால்நிலை அடிப்படையிலான வன்முறையை இல்லாதொழித்தல் WROs இன் பிரதான செயற்பாடுகளாகும். நிறுவனத்தின் பணிக்கூற்று மற்றும் தொலைநோக்கில் பால்நிலை சமத்துவம், பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளை வலுவூட்டுதல் ஆகியவற்றுக்கான அர்ப்பணிப்பு பிரதிபலிக்க வேண்டும்.
2. உள்வாங்கலுக்கான எதிர்கால நிதிக்கு விண்ணப்பிப்பதற்குத் தகுதியுடைய அமைப்புகள்
| வகை | விபரம் | தகுதிப் பிரமாணங்கள் |
| அரச சார்பற்ற நிறுவனங்கள் (NGOs) | உள்வாங்கும் ஆட்சி, மனித உரிமைகள், பயிற்சி/ கல்வி, பெண்கள் மற்றும் அபிவிருத்தி, பால்நிலை சமத்துவம், சமூக ஒத்திசைவு, மொழி உரிமைகள், வெளிப்படைத்தன்மை, சமதானத்தைக் கட்டியெழுப்புதல் மற்றும்/ அல்லது நல்லிணக்கம் ஆகியவற்றை ஊக்குவிப்பதை தமது பணிப்பாணையாகவோ அல்லது குறிக்கோள்களாகவோ கொண்டுள்ள முறையாக பதிவுசெய்துள்ள தன்னார்வ மற்றும் இலாப நோக்கற்ற நிறுவனங்கள். குறித்த நிறுவனங்கள் தேசிய, மாகாண, மாவட்ட மட்டத்தில் அல்லது பிரதேச செயலகப் பிரிவு மட்டத்தில் செயற்படுபவையாக இருக்கலாம். | எண்ணக்கருக் குறிப்பினை சமர்ப்பிக்கும் கட்டம் ::
முன்மொழிவுக் கட்டம்:
|
| தொழில்வாண்மை நிறுவனங்கள் | சட்டத்தரணிகள், கணக்காளர்கள், வைத்தியர்கள், துறைசார் நிபுணர்கள் மற்றும் ஏனைய தொழில் வல்லுநர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கும் நிறுவனங்கள். அவை தன்னார்வ மற்றும் இலாப நோக்கற்ற நிறுவனங்களாக இருப்பதோடு அனைவரையும் உள்வாங்கிய ஆட்சி மற்றும் சமூக ஒற்றுமையை மேம்படுத்தும் செயற்பாடுகளில் இணைந்திருப்பது அவசியம். உதாரணம் : இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL), சமூக விஞ்ஞானிகள் மன்றம் (SSA) போன்றன. | |
| கல்வி / ஆராய்ச்சி நிலையங்கள் | அனைவரையும் உள்வாங்கிய ஆட்சி, சமூக ஒத்திசைவு மற்றும் பால்நிலை சமத்துவம் ஆகிய எண்ணக்கருக்கள் தொடர்பான ஆராய்ச்சிகளை நடாத்துதல், விருத்தி செய்தல், கொள்கைப் பரிசீலனை மற்றும் திருத்தங்களுக்கு பரிந்துரைகளை முன்வைத்தல் போன்ற விடயப் பரப்புக்களில் நிபுணத்துவமும் அனுபவமும் உள்ள நிறுவனங்கள். உதாரணம், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் அல்லது தன்னார்வ மற்றும் இலாப நோக்கற்ற நிறுவனங்கள். | |
| சனசமூக நிறுவனங்கள். | கிராம மற்றும் உள்ளூர் மக்களுடன் நெருக்கமாக இருந்து அவர்களின் பிரச்சனைகளில் அக்கறை செலுத்துகின்ற மற்றும் பிராந்திய மற்றும் தேசிய மன்றங்களில் அவர்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற மாவட்ட மற்றும் பிரதேச மட்டங்களில் இயங்குகின்ற தன்னார்வ மற்றும் இலாப நோக்கற்ற நிறுவனமாக பதிவுசெய்துள்ள நிறுவனங்கள். | மேலே குறிப்பிட்ட தகுதிவிதிகளே செல்லுபடியாகும். என்றாலும்,:
|
3. கூட்டிணைவு மற்றும் கூட்டுவலையமைப்பு
பெண்களின் உரிமைகள்சார் அமைப்புகளானவை, ஏனைய அத்தகைய பெண்களின் உரிமைகள்சார் அமைப்புகள், பெண்களின் கிராமிய அபிவிருத்திச் சங்கங்கள் மற்றும்/ அல்லது சகவாழ்வுச் சங்கங்கள்[4] என்பவற்றுடன் பங்காண்மையுடன் பணியாற்ற முடியும். பெண்கள் கிராமிய அபிவிருத்திச் சங்கங்கள் மற்றும் சகவாழ்வுச் சங்கங்கள் என்பவற்றுக்குத் தமது தலையீடுகளினூடாக ஆதரவு அல்லது பங்காண்மை வழங்குவதற்குத் தெரிவு செய்கின்றபோது, பின்வரும் விடயங்களைக் கருத்திற் கொள்வதற்கு பெண்களின் உரிமைசார் அமைப்புகள் ஊக்குவிக்கப்படுகின்றன:
- உரிய அமைச்சின் கீழ் முறையாகப் பதிவு செய்யப்பட்ட அமைப்புக்கள்
- குறைந்தபட்சம் ஒரு வருடமாவது செயற்பாட்டிலிருத்தல்
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அமைப்புகள் ஒன்றாக விண்ணப்பிக்கின்றபட்சத்தில், தலைமைப் பங்காளர் மாத்திரம் மேலே பிரிவு 2இல் விபரிக்கப்பட்ட தகுதிகாண் விதிமுறைகளைப் பூர்த்தி செய்திருக்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றது. இதன்வழி, ஒப்பந்தமானது, தலைமைப் பங்காளருடன் மேற்கொள்ளப்படுவதுடன், அதுவே பெறப்படும் நிதிகளுக்கான பொறுப்புக் கூறல் அமைப்பாகவிருக்கும். ஏனைய பங்காளர்களுடன் தலைமைப் பங்காளர் ஒப்பந்தங்களை மேற்கொள்ள வேண்டப்படுவதுடன், சமாதானத்துக்கான பயணப்பாதைகளுக்கு அதன் பிரதியொன்றை சமர்ப்பிக்க வேண்டும்.
சகவாழ்வு மன்றங்கள் CES என்பது தன்னார்வ மற்றும் இலாப நோக்கற்ற நிறுவனங்களாகும். இவை தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் (ONUR) கீழ் நிர்வகிக்கப்படுகின்றன. இன, மத மற்றும் மொழிக் குழுக்களுக்கு மத்தியில் உள்வாங்கல், தேசிய ஒத்திசைவு மற்றும் சகவாழ்விற்கு ஆதரவளிப்பதும் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதும் அதன் பணிப்பாணையாகும்.
4. முறைமை மதிப்பீட்டுக் கவன ஈர்ப்பு (Due Diligence) குறித்த செயன்முறை
பெண்கள் உரிமைகள்சார் அமைப்புகள் பெண்கள் சமாதானம் மற்றும் பாதுகாப்பு நிதியின் கீழ் நிதியளிக்கப்படுவதற்கு பாதுகாப்புப் பரிசோதனைகள் உள்ளடங்கலாக சரியான நடைமுறைக்கான கவனம் குறித்த செயன்முறையினை வெற்றிகரமான பூர்த்தி செய்ய வேண்டியது ஒரு முன்நிபந்தனையாகும்.
விண்ணப்பதாரிகள் தமது செயற்திட்டக் குறிப்புடன் பின்வரும் துணை ஆவணங்களைச் சமர்ப்பிக்குமாறு வேண்டப்படுவார்கள்:
- 01. பதிவுச் சான்றிதழ்
- 02. அரச சார்பற்ற நிறுவனங்கள், தொழில்வாண்மை அமைப்புக்கள், ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனங்கள் கடந்த இரண்டு வருட கணக்காய்வு அறிக்கையை கொண்டிருத்தல் வேண்டுமென்பதுடன் சனசமூக அமைப்பாயின் கடந்த ஒரு வருடத்திற்கான கணக்காய்வு அறிக்கையைக் கொண்டிருத்தல் வேண்டும்.
- 03. நிறுவனமயப்படுத்தப்பட்ட நிதியியல் மற்றும் உள்ளகக் கட்டுப்பாட்டுக் கொள்கையின் பிரதி (இருக்கின்றபட்சத்தில்)
- 04. அமைப்பின் பாதுகாத்தற் கொள்னையின் பிரதி (இருக்கின்றபட்சத்தில்)
மேற்குறிப்பிட்ட சகல ஏனைய சரியான நடைமுறைக்கான தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளபட்சத்தில், பாதுகாத்தற் கொள்கையொன்று நடைமுறையில் இல்லாத பெண்கள்சார் உரிமைகள் அமைப்பிற்கு அத்தகைய கொள்கையொன்றை விருத்தி செய்வதற்கான ஆற்றலைக் கட்டியெழுப்புவதற்காக சமாதானத்துக்கான பயணப்பாதைகள் ஆதரவளிக்கும்.
- ஆற்றல் விருத்தி நிகழ்ச்சித்திட்டம்
பெண்கள்சார் உரிமை அமைப்புகள் நிறுவனமயப்படுத்தப்பட்ட நிதியியல் மற்றும் உள்ளகக் கட்டுப்பாட்டுக் கொள்கையொன்று இல்லாதபட்சத்தில், சமாதானத்துக்கான பயணப்பாதைகளினால் வழங்கப்படும் ஆற்றலைக் கட்டியெழுப்பும் நிகழ்ச்சித் திட்டத்தில் இணைந்து இந்தக் கொள்கைகளை விருத்தி செய்வதற்கான ஆதரவினைப் பெற்றுக் கொள்ள அழைக்கப்படுகிறார்கள். இதன்மூலம் பெண்கள் சமாதான மற்றும் பாதுகாப்பு நிதிக்கு மீள விண்ணப்பிப்பதற்குத் தகுதியுடையோராகின்றனர்.
கீழ்காணும் தகைமைகளைக் கொண்டிருக்கும் 15 பெண்கள் உரிமைசார் அமைப்புக்கள் மட்டுமே ஆற்றல் விருத்திக்கான நிகழ்ச்சித்திட்டத்தில் உள்வாங்கப்படும்.
- பதிவு செய்யப்பட்டு ஒரு வருடத்தையாவது பூர்த்தி செய்திருத்தல்
- நிறுவனத்தின் பெயரில் வங்கிக் கணக்கொன்றைக் கொண்டிருத்தல்
- WPSF இன் நோக்கங்களுடன் ஒத்திசையும் செயற்பாடுகளை கடந்த ஒரு வருடத்தில் நடைமுறைப்படுத்திய நிறுவனமொன்றாக இருத்தல்
- இத்திட்டத்தின் இலக்கு பிரதேசங்களின் பிரதேச செயலக பிரிவில் தனது தலைமைக் காரியாலயத்தை கொண்டிருக்கும் பெண்கள் உரிமைசார் அமைப்புக்களுக்கு முன்னுரிமையளிக்கப்படும்.
5. பிரதேச கவனக்குவிப்பு
செயற்திட்டத்தினால் இலக்கு வைக்கப்பட்ட மாவட்டங்களில் தமது தலைமைக் காரியாலயங்களைக் கொண்டுள்ள பெண்கள் உரிமைகள்சார் அமைப்புகளுக்கு முன்னுரிமையளிக்கப்படும். தேசிய மட்ட அல்லது மாகாண மட்ட பெண்கள்சார் உரிமை அமைப்புகள் செயற்திட்டத்தினால் இலக்கு வைக்கப்பட்ட புவியியல் அமைவிடங்களில் பணியாற்ற வேண்டியது கட்டாயமானதுடன், அவ்வாறு செயற்படுவதற்கான தமது இயலுமையையும் வெளிப்படுத்த வேண்டும்.
பின்வரும் இலக்கு வைக்கப்பட்ட நிறுவங்களினால் சேவை வழங்கப்படும் சமூகங்களில் பணியாற்றும் செயற்திட்டங்களுக்கு முன்னுரிமையளிக்கப்படும்.
| மாகாணம் | மாவட்டங்கள் | இலக்கு நிறுவனங்கள் |
| வடக்கு | யாழ்ப்பாணம் | 1. தலைமைப் பொலிஸ் நிலையம் – யாழ்ப்பாணம் |
| வவுனியா | 2. தலைமைப் பொலிஸ் நிலையம் – வவுனியா | |
| கிழக்கு | திருகோணமலை | 3. பிரதேச செயலகம் – திருகோணமலை பட்டினமும் சூழலும் |
| 4. மாவட்டப் பொது வைத்தியசாலை – திருகோணமலை | ||
| மத்திய | கண்டி | 5. பிரதேச செயலகம் – கண்டி கடவத்சதர – கங்கவட்ட கோரளை |
| 6. மாநகர சபை – கண்டி | ||
| நுவரெலியா | 7. மாவட்டச் செயலகம் – நுவரெலியா | |
| 8. மாநகர சபை – நுவரெலியா | ||
| 9. மாவட்டப் பொது வைத்தியசாலை - நுவரெலிய | ||
| 10. பிரதேச செயலகம் - தலவாக்கலை | ||
| 11. நீதவான் மற்றும் மாவட்ட நீதிமன்றம் – ஹற்றன் | ||
| 12. பிரதேச செயலகம் - நோர்வூட் | ||
| தெற்கு | காலி | 13. பிரதேச செயலகம் – காலி கடவத்சதர |
| 14. பெண்களுக்கான ஜேர்மன் – ஸ்ரீலங்கா நட்பு வைத்தியசாலை – கராபிட்டிய/காலி | ||
| வடமேல் | புத்தளம் | 15. பிரதேச செயலகம் - புத்தளம் |
6. எதிர்பார்க்கப்படும் பெறுபேறுகள்
முன்மொழியப்படும் அனைத்து செயற்திட்டங்களும் கீழ்க் குறிப்பிடப்பட்டுள்ள ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மையப் பகுதிகளுடன் இணங்கிச் செல்கின்ற வகையில் வடிவமைக்கப்பட வேண்டும். ஒரு செயற்திட்டம் ஒன்றுக்கும் மேற்பட்ட மையப் பகுதிகளை உள்ளடக்கியிருப்பதன் காரணமாக அதன் செயற்திட்டக் குறிப்புகள் உயர் புள்ளிகளைப் பெற்றுக் கொள்ளாது. இதன் விளைவைப் பொறுத்தவரை, அகலத்தைவிட ஆழமே ஊக்குவிக்கப்படும்.
| இலக்கு: பெண்கள்சார் உரிமை அமைப்புகள் பெண்கள், சமாதானம் மற்றும் பாதுகாப்பு நிகழ்ச்சி நிரலை அமுலப்டுத்துவதற்கான ஊக்குவிப்புகளையும் பரிந்துரைத்தலையும் மேற்கொள்வதற்கான இயலுமையை அதிகரித்தல். | |
| இலக்குப் பகுதி 1 | பெண்கள் சட்ட மற்றும் கொள்கைச் சீர்திருத்தங்கள் மூலமாகப் பால்நிலை அடிப்படையிலான வன்முறை மற்றும் பாகுபாடுகளுக்கு எதிரான மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பைக் கொண்டிருப்பார்கள் |
| இலக்குப் பகுதி 2 | கள மட்டத்தில் உள்ள பெண்கள் பால்நிலை உணர்திறன் கொண்ட அரச ஆதரவு வளங்கள் மற்றும் சேவைகளுக்கான அணுகலை மேம்படுத்தியுள்ளனர் |
| இலக்குப் பகுதி 3 | மோதலால் பாதிக்கப்பட்டு இடப்பெயர்விற்கு ஆளான பெண்களுக்கு பால்நிலை உணர்திறனுள்ள, அரசால் வழங்கப்படுகின்ற உளநல-சமூக சேவைகள் மற்றும் நிலையான தீர்வுகள் கிடைத்தல் |
| இலக்குப் பகுதி 4 | பெண்கள் பால்நிலை உணர்திறன் மற்றும் ஒழுங்குபடுத்தப்பட்ட அனர்த்த முகாமைத்துவப் பொறிமுறைகளுக்கு மேம்படுத்தப்பட்ட அணுகலைக் கொண்டிருப்பார்கள் |
| இலக்குப் பகுதி 5 | இராணுவக் கணவனை இழந்த பெண்கள் முன்னாள் பெண் போராளிகள் மற்றும் பெண்கள் தலைமைத் தாங்கும் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துகின்ற பால்நிலை உணர்திறன் கொண்ட அரச சேவைகளுக்கான அணுகல் அதிகரித்துள்ளது |
| இலக்குப் பகுதி 6 | பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க குறிப்பாக வயதான பெண்கள் சிறுமிகள் இயலாமைகளை உடைய பெண்கள் மற்றும் மாற்றுப் பாலினப் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கவும் அவர்களின் சமூக-பொருளாதார வாய்ப்புகளையும் தீர்மானமெடுப்பதில் பங்கேற்பதை மேம்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. |
| இலக்குப் பகுதி 7 | இலங்கையில் கள மட்டத்திலுள்ள பெண்களைப் பாதிக்கும் நுண்நிதி நடைமுறைகள் தொடர்பான தலையீடுகள் பால்நிலையைக் கருதுவதாகவும் பிரதானப்படுத்துவதாகவும் பின்பற்றப்படுகின்றன |
| இலக்குப் பகுதி 8 | சமாதானத்தைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் மோதல்-தடுப்பு மற்றும் மோதல் தீர்வு ஆகியவற்றில் பெண்களின் சமமான ஈடுபாடு மற்றும் ஆளுகை மற்றும் அரசியலின் தீர்மானமெடுக்கும் மட்டங்களில் பெண்களின் ஈடுபாட்டின்மூலம் இலங்கைச் சமூகத்தின் ஜனநாயக விழுமியங்களை மேம்படுத்துதல் |
| இலக்குப் பகுதி 9 | சமுதாயத்தில் தீர்மானமெடுப்பதில் அனைத்து மட்ட ஆளுகைகளிலும் பெண்களின் சமமான மற்றும் அதிகரித்த ஈடுபாடு |
7. செயற்திட்டக் காலம் மற்றும் வரவு செலவுத் திட்டம்
முன்மொழியப்படும் செயற்றிட்டத்தின் சிக்கல்தன்மை, பரப்பெல்லை மற்றும் தாக்கம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்ட முயற்சிகளுக்கு சமாதானத்திற்கான பயணப்பாதையானது, 10,000,000 இலங்கை ரூபாய்கள் வரையில் நிதியளிக்கும். இத்தகைய பாதீட்டைக் கொண்ட முன்னைய செயற்திட்டங்களின் உதாரணங்கள் உள்ளடங்கலாக இந்த அளவு மட்டத்தில் செயற்திட்டமொன்றை நடத்துவதற்கான வி;ண்ணப்பதாரியின் இயலளவு நிரூபிக்கப்பட வேண்டும். விண்ணப்பதாரிகள் 12 மாதம், 24 மாதம் அல்லது 36 மாதம் கொண்ட செயற்றிட்டங்களை அமுல்படுத்துவதற்கான தெரிவுகள் காணப்படும்.
பெண்கள் சமாதான மற்றும் பாதுகாப்பு நிதியத்தினால் நிதியளிக்கப்படும் செயற்திட்டங்களில் பின்வரும் செலவினங்கள் உள்ளடக்கப்பட முடியாது என்பதைக் கருத்திற் கொள்க:
- சொத்துக்களின் கொள்வனவு
- வாகனக் கொள்வனவு
- ஆடம்பர பொருள்கள் மற்றும் சேவைகளின் கொள்வனவு அல்லது வாடகை (உதாரணம்: போக்குவரத்துக்காக ஆடம்பர வாகனங்களை வாடகைக்கு அமர்த்துதல்)
- அரசாங்க நிறுவனங்கள் அல்லது பொது சேவை ஊழியர்களுக்கான நேரடி நிதி ஆதரவு
- ஒப்பந்தத்தைக் கைச்சாத்திடுவதற்கு முன்னரும் அது காலாவதியான பின்னருமாக மேற்கொள்ளப்படும் செலவினங்கள்
8. எண்ணக்கருக் குறிப்புகளுக்கான மதிப்பீட்டு விதிமுறைகளும் பூரண முன்மொழிவுகளுக்கான அழைப்பும்
| 1. அமைப்பின் ஆற்றல் | 30 புள்ளிகள் |
| முன்மொழியப்பட்ட செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான அமைப்பின் இயலுமை: அமைப்பியல் ரீதியான அனுபவம் (முகாமைத்துவமும் செயற்றிட்ட அமுலாக்கமும்). இந்த அமைப்பானது எவ்வளவு காலம் செயற்பாட்டிலுள்ளது? இந்த அமைப்பிடம் கணக்காய்வு செய்யப்பட்ட கணக்குகள் உள்ளனவா? அமைப்பின் வருடாந்த பாதீடு மற்றும் முன்மொழியப்பட்டுள்ள பாதீடு என்பவற்றின் அளவினை ஒப்பிடுதல். இவ்வமைப்பு ஏற்கெனவே பூர்த்தி செய்த அல்லது தற்பொழுது நடைமுறைப்படுத்துகின்ற செயற்றிட்டங்களையும் நிதியீட்டாளர்களையும் மீளாய்வு செய்தல். பணியாளர்களின் அமைவுச் சேர்க்கை (எண்ணிக்கை, உள்ளக நிபுணத்துவம்). | 15 |
| புவியியல் ரீதியான மையப் பகுதிகளில் செயற்பாடுகளை அமுல்படுத்துவதிலுள்ள அனுபவம். அமைப்பிற்கு அனுபவமுள்ள செயற்திட்ட பகுதிகளையும் அமுல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்ற செயற்திட்டங்களையும் மீளாய்வு செய்தல்: பெண்கள் உரிமைகள், பால்நிலை சமத்துவம், பெண்கள் சமாதானம் மற்றும் பாதுகாப்பு. | 15 |
| 2. முன்மொழியப்படும் செயற்பாடுகளின் சிறப்பு | 50 புள்ளிகள் |
| முன்மொழியப்பட்ட செயற்பாடுகள் பெண்கள் சமாதானம் மற்றும் பாதுகாப்பு நிதியின் மையப் பகுதிகளுக்குப் பொருந்தக் கூடியதாகவும் பெண்கள் மற்றும் அல்லது பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் பால்நிலை சமத்துவம் என்பவற்றைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் வாய்ப்புள்ளவையாக இருத்தல். | 10 |
| முன்மொழியப்பட்ட செயற்திட்ட அமைவிடத்திலுள்ள இலக்கு வைக்கப்பட்ட குழுக்களின் தேவைகளுக்கும் முன்னுரிமைகளுக்கும் பொருத்தமானதாக முன்மொழியப்படும் செயற்பாடுகள் இருத்தல். | 10 |
| பல பகுதிகளுக்கும் சிறிதளவான வளங்களைப் பகிர்வதைவிட ஒன்று அல்லது இரண்டு செயற்திட்டப் பகுதிகளில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக செயற்திட்டம் வடிவமைக்கப்பட்டிருத்தல் (செயற்பாடுகளின் வடிவம் அகலமாக இருப்பதைவிட ஆழமாக இருத்தல்). | 10 |
| ஆழமானதும் நிலைத்து நிற்கக் கூடியதுமான தாக்கத்தை ஏற்படுத்துவதனை உறுதிப்படுத்துகின்ற வகையில், முன்மொழியப்படும் செயற்பாடுகள் ஆண்களையும் ஆண் பிள்ளைகளையும் ஈடுபடச் செய்தலும் உள்ளடக்கலும் | 10 |
| முன்மொழியப்படும் செயற்பாடுகள் புத்தாக்கமுடையனவாக இருத்தல். | 10 |
| 3. அடைவு | 10 புள்ளிகள் |
| மதிப்பிடப்பட்ட பாதீடு மற்றும் நேரடியானதும் மறைமுகமானதுமான பயனாளிகள் சரியான அளவிலும் நியாயமானதாகவும் இருத்தல். | 10 |
| 4. நிலைபேண் தன்மை | 10 புள்ளிகள் |
| முன்மொழியப்படும் செயற்பாடுகள் நிலைத்து நிற்கக் கூடிய முடிவுகளைக் கொண்டு வரக்கூடிய சாத்தியங்களைக் கொண்டிருத்தல். | 10 |
| மொத்த புள்ளிகள் | 100 |
10.நேர அட்டவணை
| விபரம் | நவ. 2024 | டிச 2024 | ஜன 2025 | பெப் 2025 | மார்ச் 2025 | ஏப். 2025 | மே 2025 |
| எண்ணக்கரு குறிப்புகளுக்கான அழைப்பு ஆரம்பம் | 1 | ||||||
| எண்ணக்கரு குறிப்புகளைச் சமர்ப்பிப்பதற் கான இறுதித் திகதி | 20 | ||||||
| விண்ணப்பத்தின் நிலை குறித்து விண்ணப் பதாரிகளுக்கு அறிவித்தல் | 22 | ||||||
| பூரண முன்மொழிவுகளைச் சமர்ப்பிப்பதற் கான இறுதித் திகதி | 1 | ||||||
| விண்ணப்பத்தின் நிலை குறித்து விண்ணப் பதாரிகளுக்கு அறிவித்தல் | 10 | ||||||
| ஒப்பந்தமிடல் ஆரம்பம் | 1 |
எண்ணக்கரு குறிப்புகள் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர், தமது விண்ணப்பத்தின் நிலை குறித்து விசாரிப்பதற்காக சமாதானத்துக்கான பயணப்பாதை செயற்திட்டத்தினைத் தொடர்பு கொள்வதிலிருந்து தவிர்ந்து கொள்ளுமாறு விண்ணப்பதாரிகள் கோரப்படுகின்றனர்.
எவ்வாறு விண்ணப்பிப்பது?
தங்களது செயற்திட்டத்துக்கான தகுதியை மதிப் பிடும் Survey Monkey “பகுதி ஏ: தகுதிகாண் பரிசோதனைப் படிவ”த்தினைப்
பூர்த்தி செய்யவும்.
தாங்கள் இச்செயற்திட்டத்திற்கு தகுதி பெறுவீர்களாயின், சமாதானத்துக்கான பயணப்பாதைகள் எண்ணக்கரு குறிப்புக்கான படிவத்தினை மின்னஞ்சலூடாக அனுப்பும். தாங்கள் இச்செயற்திட்டத்துக்குத் தகுதி பெறாவிடினும், ஆற்றலைக் கட்டியெழுப்பும் நிகழ்ச்சித் திட்டத்தைத் தொடர விரும்புகிறீர்களாயின், சமாதானத்துக்கான பயணப்பாதைகள் ஆற்றலைக் கட்டியெழுப்பும் நிகழ்ச்சித் திட்ட சேர்க்கைப் படிவத்தை மின்னஞ்சலூடாக அனுப்பும். ஆற்றலைக் கட்டியெ ழுப்பும் நிகழ்ச்சித் திட்டத்துக்கான விண்ணப்பங்கள் மதிப்பிடப்பட்டதன் பின்னர், தெரிவு செய்யப்படும் விண்ணப்பதாரிகளுக்கு அது குறித்து அறிவிக்கப் படும்.
பகுதி 4இல் குறிப்பிடப்பட்டதன்படி, தேவையான துணை ஆவணங்களுடன் எண்ணக்கரு குறிப்பினை 2024 டிசம்பர் 20ஆம் திகதி 23:59 மணிக்கு முன்னதாக மின்னஞ்சலூடாக சமர்ப்பிக்க வேண்டும். எண்ணக்கரு குறிப்புகள் சிங்களம், தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பூர்த்தி செய்யப்படலாம். எண்ணக்கரு குறிப்புக்கான ஆவணத்தில் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கமைய அதனைப் பூர்த்தி செய்யவும். தாங்கள் இச்செயற்திட்டத்துக்கான தகுதிகாண் விதிமுறைகளைப் பூர்த்தி செய்யாவிடினும், ஆற்றலைக் கட்டியெழுப்பும் நிகழ்ச்சித் திட்டத்தில் சேர்ந்து கொள்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதில் இணைந்துகொள்ள விரும்புகின்றபட்சத்தில், 2024 டிசம்பர் 20ஆம் திகதி 23:39 மணிக்கு முதல் சேர்க்கைப் படிவத்தைப் பூர்த்தி செய்து அனுப்பவும்.